கோவை: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, தனது பணிகளில் தீவிரம் காட்டி வந்த நிலையில், நேற்று அவருக்கு திடீர் என உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால், கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், ‘வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே அமைச்சர் மருத்துவமனையில் சேர்ந்து உள்ளார். தற்போது அவரது உடல்நிலை நன்றாக உள்ளது’ என்று தெரிவித்து உள்ளது.