Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மணிப்பூர், லடாக், திபெத்தில் லேசான நிலநடுக்கம்: பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை

இம்ப்ஹல்: மணிப்பூர் மாநிலம் சாந்தெல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவாகியுள்ளது. இதைத்தொடர்ந்து, திபெத்தில் நேற்றிரவு 10.27 மணிக்கு லேசான நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 3.5ஆக பதிவானது. லடாக்கின் கார்கில் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் இரவு 11.02 மணியளவில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 33.32 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 76.78 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.