Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!!

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2வது நாளாக 23,300 கன அடியாக நீடிக்கிறது. மேட்டூர் அணையில் நீர்மட்டம் 120 20 அடி; நீர் இருப்பு 93.470 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக 23,300 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. டெல்டா பாசனத்துக்கு 22,500 கனஅடி, மேற்கு கிழக்கு கால்வாய் வழியாக 800 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

இதனால் உபரி நீர் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளது. எனவே மக்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இதனை நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் பட்சத்தில், உடனடியாக பதினாறு கண்கள் வழியாக உபரி நீர் திறக்கப்படலாம் என்றும் அறிவுறுத்தியது. மேலும், தங்கமாபுரிபட்டினம், பெரியார் நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது.