Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மருத்துவ துணைப் படிப்பு.. புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு: நடப்பு கல்வியாண்டு முதலே அமல்!!

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசுப் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு நீட் அல்லாத இளநிலை படிப்புகளில் 10% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 1 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கடந்த 2023-24ம் கல்வியாண்டு முதல் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.ஏ.எம்.எஸ்., உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் 10% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

இதேபோன்று நடப்பு கல்வியாண்டில் இருந்து அரசுப் பள்ளிகளில் பயின்று நீட் தேர்வு அல்லாத உயர்கல்விகளில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கால்நடை, வேளாண்மை, தோட்டக்கலை, நர்சிங், உயிரியல் சார்ந்த துணை மருத்துவப்படிப்பு, பட்டயபடிப்புகள், மருந்தகம், பொறியியல், சட்டம், கலை அறிவியல் மற்றும் வணிக படிப்புகளில் உள்ளிட்ட பிரிவுகளில் மாணவர்கள் 10 சதவீத இடஒதுக்கீட்டில் சேரலாம்.

இதற்கு தகுதி பெற மாணவ, மாணவிகள் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசுப்பள்ளிகளில் பயின்றிருக்க வேண்டும். அந்த வகையில், 10 சதவீத இடஒதுக்கீட்டில் சேரும் மாணவ, மாணவிகளின் கல்விச் செலவை காமராஜர் கல்வி நிதியின் கீழ் அரசே ஏற்கும். சமூக நிதி மற்றும் நிர்வாக கொள்கைகளுக்கு இணங்க உயர்கல்வியில் சமத்துவத்தை மேம்படுத்த இடஒதுக்கீடு வழங்கப்படுவதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவு நடப்பு கல்வியாண்டு முதலே அமலுக்கு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அரசுப்பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.