Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

எம்​பிபிஎஸ், பிடிஎஸ் 3ம் சுற்று கலந்​தாய்வு: அக்.6ம் தேதி தொடக்கம்

சென்னை: நடப்பாண்டு எம்​பிபிஎஸ், பிடிஎஸ் படிப்​பு​களுக்​கான 3ம் சுற்று கலந்​தாய்வு வரும் 6ம் தேதி தொடங்​கு​கிறது. தமிழகத்​தில் அரசு மற்​றும் தனி​யார் கல்​லூரிகளில் உள்ள அரசு, நிர்​வாக ஒதுக்​கீட்டு எம்​பிபிஎஸ், பிடிஎஸ் இடங்​களுக்​கான கலந்​தாய்வை மருத்​து​வக் கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​ககம் (டிஎம்இ) நடத்​துகிறது. அதன்​படி, இரண்டு சுற்று கலந்​தாய்வு முடி​வில் காலி​யாக​வுள்ள இடங்​கள், மாணவர்​கள் சேராத​தால் ஏற்படும் காலி​யிடங்​கள் மற்​றும் கூடு​தலாக சேர்க்​கப்​பட்​டுள்ள இடங்​களுக்​கான மூன்​றாம் கட்ட கலந்​தாய்வு அக்​.6ம் தேதி ஆன்​லைனில் தொடங்​க​ உள்​ளது. இதில், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்தச் சுற்று, மருத்துவப் படிப்பை எப்படியாவது உறுதி செய்ய விரும்பும் மாணவர்களுக்கு ஒரு கடைசி மற்றும் முக்கியமான வாய்ப்பு ஆகும். அரசு நிர்​ண​யித்த கட்​ட​ணத்​தை​விட கூடு​தலாக வசூலிக்​கும் தனி​யார் மருத்​து​வக் கல்​லூரி​களின் அங்​கீ​காரம் ரத்து செய்​யப்​படும் என்று அரசு அறி​வித்​துள்​ளது.