சென்னை: நடப்பாண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான 3ம் சுற்று கலந்தாய்வு வரும் 6ம் தேதி தொடங்குகிறது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு, நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ) நடத்துகிறது. அதன்படி, இரண்டு சுற்று கலந்தாய்வு முடிவில் காலியாகவுள்ள இடங்கள், மாணவர்கள் சேராததால் ஏற்படும் காலியிடங்கள் மற்றும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ள இடங்களுக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு அக்.6ம் தேதி ஆன்லைனில் தொடங்க உள்ளது. இதில், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்தச் சுற்று, மருத்துவப் படிப்பை எப்படியாவது உறுதி செய்ய விரும்பும் மாணவர்களுக்கு ஒரு கடைசி மற்றும் முக்கியமான வாய்ப்பு ஆகும். அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக வசூலிக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
+
Advertisement