சென்னை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மருது அழகுராஜ் திமுகவில் இணைந்தார். அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் திமுகவில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; எடப்பாடி பழனிசாமி அதிமுகவை ஆக்கிரமித்துள்ளார். ஜனநாயகத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுகிறார் எடப்பாடி பழனிசாமி. ஒற்றை தலைமை ஜனநாயகத்துக்கு எதிரானது. எடப்பாடி அவமதிப்பு அரசியலை செய்கிறார். அபகரிப்பு அரசியலில் இருந்து அரவணைப்பு அரசியலில் இணைந்துள்ளேன். திமுகவில் உழைக்க வந்துள்ளேன்; இன்னும் பல பேர் திமுகவில் இணைய உள்ளனர்
+
Advertisement