Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

அரசு வேலை வாங்கி தருவதாக பட்டதாரியிடம் ரூ.6 லட்சம் மோசடி செய்த நபர் கைது

சென்னை: நேர்முகத்தேர்வு இல்லாமல் அரசு வேலை வாங்கி தருவதாக பட்டதாரியிடம் ரூ.6 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர். ராயப்பேட்டை வி.எம்.தெருவை சேர்ந்தவர் சதீஷ்பாபு (43). கடந்த 2020ம் ஆண்டு இவருக்கு அறிமுகமான பள்ளிக்கரணையை சேர்ந்த உதயகுமார் என்பவர், ‘எனக்கு அரசு அதிகாரிகள் பலரை தெரியும். எனவே, உனக்கு நேர்முகத்தேர்வு இல்லாமல் அரசு வேலை வாங்கி தருகிறேன்,’ என கூறியுள்ளார். அதை நம்பி, அவர் கேட்ட ரூ.6 லட்சத்தை உதயகுமாரிடம் கொடுத்துள்ளார். ஆனால், சொன்னபடி சதீஷ்பாபுக்கு எந்த வேலையும் வாங்கி தரவில்லை. கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட போதும், தரவவில்லை.

இதுகுறித்து சதீஷ்பாபு, ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்படி போலீசார் விசாரணை நடத்திய போது, சதீஷ்பாபு போல் பலரிடம் உதயகுமார் அரசு வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் நேற்று முன்தினம் உதயகுமாரை கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.