Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மலேசியா பத்து மலை கோயிலில் ஜன. 1ல் புதுப்பொலிவுடன் முருகன் சிலை திறப்பு விழா

கோலாலம்பூர்: மலேசியாவில் பத்து மலை முரு​கன் கோயி​லில் ஜன.1ம் தேதி புதுப்​பொலிவுடன் சிலை திறப்பு விழா நடை​பெற உள்​ளது. மலேசி​யா​வில் கோலாலம்​பூர் அருகே கோம்​பாக் மாவட்​டத்தில், சுண்​ணாம்பு மலைக்​குன்​றுகளுக்கு இடையே இயற்கை சூழலில் பத்து மலை முரு​கன் கோயில் உள்​ளது. இந்​த கோயிலின் முன்​பாக 140 அடி உயர முருகன் சிலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிர​திஷ்டை செய்யப்பட்​டுள்​ளது. இங்கு தைப்​பூச திரு​விழா வெகு விமரிசை​யாக நடத்​தப்பட்டு வரு​கிறது. இக்​கோயிலுக்கு 272 படிகள் ஏறி சென்று மூல​வரான முரு​கனை தரிசிக்க வேண்டும். இவ்​வாறு போகும் போது, வழி​யில் பல குகைகள் உள்​ளன. பல்​வேறு சுவாமிகளின் சன்​ன​தி​களும் உள்​ளன.

இக்​கோயி​லின் முகப்​பில் பிரம்​மாண்​ட​மான முரு​கன் சிலை அமைக்​கப்​பட்​டுள்​ளது. 140 அடி உயர​முள்ள இச்​சிலைக்கு தங்க வர்​ணம் பூசப்​பட்டு இருக்​கும். தற்​போது இச்​சிலை பகு​தி​யில் பராமரிப்​பு பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இதனால் இச்​சிலை திரை போட்டு மூடப்​பட்டுள்​ளது. இந்​த பணி​கள் முழுமை பெற்று வரும் ஜனவரி 1ம் தேதி பிரம்​மாண்​ட​மான முறை​யில் புதுப்​பொலிவுடன் திறப்பு விழா நடை​பெற உள்​ள​தாக கோயில் நிர்​வாகம் தெரி​வித்​துள்​ளது.