Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மகாராஷ்டிராவின் 29 மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுப்பு: மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

மும்பை: மகாராஷ்டிராவில் மீண்டும் மழை தீவிரமடைந்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு மாநிலத்தில் 29 மாவட்டங்களுக்கு அதிக மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் பெய்த கனமழை மாநிலம் முழுவதும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது, மராத்வாடா மற்றும் மேற்கு மகாராஷ்டிரா ஆகிய இடங்கள் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விதர்பாவில் உள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பல கிராமங்கள் தொடர்பை இழந்துள்ளன. சில இடங்களில் மக்கள் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றனர். அதே நேரத்தில், பாலங்கள் நீரில் மூழ்கியதால் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் அடுத்த சில நாட்களுக்கு மாநிலத்தில் தொடர்ந்து கடுமையான மழை பெய்யும் என

இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் மழையின் தீவிரம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.