மதுரை: மதுரையில் ஐடிஐ விடுதியில் மாணவரை ராகிங் கொடுமை செய்த விவகாரத்தில் விடுதி காப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். செக்கானூரணி விடுதியில் ஒரு மாணவரை சக மாணவர்கள் ஆடைகளை களைந்து ராகிங் செய்துள்ளனர். வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால் பெற்றொர் புகாரில் போலீசார் 3 மாணவர்களை பிடித்து விசாரணை நடத்திவருகின்றனர். பணியில் கவனக் குறைவாக இருந்ததாக விடுதிக் காப்பாளர் பாலமுருகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
+
Advertisement