Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

அதிமுக ஆட்சிக்காலத்தில் மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு எதிரான வழக்கில் தீவிரம் காட்ட வேண்டும்: லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அதிமுக ஆட்சி காலத்தில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சி துறை அமைச்சராக பதவி வகித்த போது சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில் 98 கோடியே 25 லட்சம் ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் ஆறு வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று லஞ்ச ஒழிப்புத் துறைக்கு எதிராக அறப்போர் இயக்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த நீதிமன்ற அவமதிப்பு வழ்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு ேநற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, டெண்டர் முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரி விண்ணப்பித்த போது, தமிழில் உள்ள ஆவணங்களை மொழிபெயர்த்து அனுப்புமாறு விண்ணப்பத்தை ஒன்றிய அரசு திருப்பி அனுப்பி விட்டது. 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களை கொண்ட ஆவ்ணங்கள மொழிபெயர்க்கும் பணிக்கு கூடுதல் மொழிபெயர்ப்பாளர்களை நியமிக்க 13 லட்சம் ரூபாய் ஒதுக்கி அரசு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை முடித்து ஒன்றிய அரசு அனுமதி கோரி மீண்டும் விண்ணப்பிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக் தெரிவித்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, முன்னாள் அமைச்சர், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிரான வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்காதது ஏன்?. அமைச்சர்கள், எம்பிக்கள் எம்எல்ஏக்கள் மீதான வழக்கில் எதுவுமே நகர்வதில்லை. ஆனால் மற்றவர்கள் மீதான வழக்கில் வந்தே பாரத் ரயில் போல வேகம் உள்ளது. சட்டமன்ற தேர்தல் நெருங்க உள்ள நிலையில், தனக்கு எதிராக எந்த வழக்கும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் கூறக்கூடும். மக்கள் நம்பிக்கையை பெற அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் வழக்குகளை லஞ்ச ஒழிப்புத் துறை தீவிரமாக கருத வேண்டும். நீண்ட காலம் எடுத்துக் கொண்டால், வழக்கு தனது வலுவை இழந்து விடும். வழக்கை அனைவரும் மறந்து விடக் கூடும் எனத் தெரிவித்த நீதிபதி, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்புக்கு அவகாசம் வழங்கி, விசாரணையை நவம்பர் 10ம் தேதிக்கு

தள்ளிவைதார்.