Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டின் வாழ்வாதாரம் காக்க தூத்துக்குடியிலிருந்து இன்று பிரசாரம் தொடங்குகிறார் வைகோ: 20ம் தேதி சென்னையில் முடிக்கிறார்

சென்னை: மதிமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தின் 8 இடங்களில் தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களைக் காக்க, ஜனநாயகத்தைப் பாதுகாக்க, மதச்சார்பின்மையை நிலைநிறுத்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் பிரசார கூட்டங்கள் இன்று(9ம்தேதி) தூத்துக்குடியில் தொடங்குகிறது. இந்த பிரசார கூட்டம் ஆகஸ்ட் 20ம்தேதி சென்னையில் நிறைவடைகிறது.

அதன் இன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் வெளியேற்றம் என்ற தலைப்பில் பிரசார கூட்டம் நடக்கிறது. 10ம்தேதி கடையநல்லூரில் மதச்சார்பின்மையும் கூட்டாட்சியும் என்ற தலைப்பிலும், 11ம்தேதி கம்பத்தில், முல்லைப் பெரியாறும், நியூட்ரினோவும் என்ற தலைப்பிலும், 12ம்தேதி திண்டுக்கல்லில் விவசாயிகள், மீனவர்கள் துயரம் என்ற தலைப்பிலும் நடக்கிறது.

வரும் 13ம்தேதி கும்பகோணத்தில் மேகதாதுவும், மீத்தேனும் என்ற தலைப்பிலும், 14ம்தேதி நெய்வேலியில், நெய்வேலி நிலக்கரி நிறுவனம் என்ற தலைப்பிலும், 18ம்தேதி கோவை சூலூரில் இந்தி ஏகாதிபத்தியம் என்ற தலைப்பிலும், 20ம்தேதி சென்னை திருவான்மியூரில் சமூக நீதியும், திராவிட இயக்கமும் என்ற தலைப்பிலும் பிரசார கூட்டங்கள் நடக்கிறது. இந்த கூட்டங்களில் வைகோ தலைமை உரையாற்றுகிறார். அதேபோன்று, அனைத்துக் கூட்டங்களிலும் மதிமுக பொருளாளர் மு.செந்திலதிபன், கவிஞர் மணிவேந்தன் உரையாற்றுவார்கள்.