பர்மிங்காம்: ஓய்வு பெற்ற ஜாம்பவான் வீரர்கள் பங்கேற்கும் உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் நடந்து வந்தன. இதன் இறுதிப் போட்டியில், பாகிஸ்தான் - தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய பாக், 20 ஓவரில் 5 விக்கெட் இழந்து 195 ரன் குவித்தது. அதைத் தொடர்ந்து 196 ரன் வெற்றி இலக்குடன் தென் ஆப்ரிக்கா களமிறங்கியது.
துவக்க வீரர் ஹாஸிம் ஆம்லா 18 ரன்னில் வீழ்ந்தார். மற்றொரு துவக்க வீரர் ஏபி டி வில்லியர்ஸ் ஆட்டமிழக்காமல் 60 பந்துகளில் 7 சிக்சர், 12 பவுண்டரிகளுடன் 120 ரன்களை வேட்டையாடினார். 16.5 ஓவரில் தென் ஆப்ரிக்கா ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 197 ரன் குவித்து வெற்றி வாகை சூடியது. அதனால், சாம்பியன் பட்டத்தையும் அந்த அணி அநாயாசமாக கைப்பற்றியது.