Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்துவதற்கான தகுந்த நேரமிது: சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

சென்னை: யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்துவதற்கான தகுந்த நேரமிது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நேர்காணல் தர வருபவர்கள் அவதூறான கருத்துக்களை கூற, தூண்டும் நேர்காணல் எடுப்பவர்களை முதல் எதிரியாக சேர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன் ஜாமின் கோரிய யூடியூப் சேனல் நிர்வாகி ஃபெலிஸ் ஜெரால்ட் மனு மீது நீதிபதி குமரேஷ் பாபு கருத்து தெரிவித்தார். காவல்துறை அதிகாரிகளையும் பெண் காவலர்களையும் ஆபாசமாக பேசியதாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிபரப்பிய யூடியூப் சேனல் தலைமை நிர்வாகி ஃபெலிக்ஸ் முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.