வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என காங்கிரஸ் அறிவிப்பு
டெல்லி: வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. திமுகவை தொடர்ந்து காங்கிரசும் வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தொடர முடிவு செய்துள்ளது. வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா, இஸ்லாமியர்களின் நலனுக்கு எதிரானது என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.