விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே கடந்த மாதம் நடந்த வெடி விபத்தில் பலி 5 ஆக உயர்ந்துள்ளது. பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த முருகன் என்பவர் இன்று உயிரிழந்தார். கருப்பையா, சவுண்டம்மாள், கணேசன், பேச்சியம்மாள் ஆகியோர் ஏற்கெனவே உயிரிழந்தனர்.
+