தூத்துக்குடி : தூத்துக்குடியில் இன்று நடைபெறவுள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 41 தொழில் நிறுவனங்களுடன் ரூ.32,554 கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. இந்த தொழில் முதலீடுகள் மூலமாக 50,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.