Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மீனவர்கள் மீதான தாக்குதல் வழக்கு : பிரதமர் அலுவலக செயலாளரை விடுவிக்க மறுப்பு

மதுரை : தமிழ்நாடு மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்பான வழக்கில் இருந்து பிரதமர் அலுவலக செயலாளரை விடுவிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க இலங்கை அரசுடன் பேச்சு நடத்த உத்தரவிட கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. மீனவர் மீதான தாக்குதல் வழக்கிலிருந்து பிரதமர் அலுவலக செயலாளரை நீக்க ஒன்றிய அரசு தரப்பு கோரிக்கை வைத்தது. பிரதமர் அலுவலக முதன்மை செயலரை ஏன் வழக்கிலிருந்து நீக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மனு குறித்து பிரதமர் அலுவலக செயலர், ஒன்றிய உள்துறை செயலர், வெளியுறவு செயலர் பதில் மனு தாக்கல் செய்ய ஆணையிட்டனர்.