குமாரபாளையத்தில் பிடிபட்டது ஏடிஎம்களை குறிவைத்து கொள்ளையடிக்கும் கும்பல் : சேலம் சரக டிஐஜி உமா விளக்கம்
நாமக்கல் குமாரபாளையத்தில் ராஜஸ்தான், ஹரியானா கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டது எப்படி என்பது பற்றி சேலம் சரக டிஐஜி உமா விளக்கம் அளித்துள்ளார். அதில், "குமாரபாளையத்தில் பிடிபட்டது ஏடிஎம்களை குறிவைத்து கொள்ளையடிக்கும் கும்பல் என்பது தெரியவந்துள்ளது. குமாரபாளையத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு கொள்ளையன் உயிரிழப்பு; காயமடைந்த அஸ்ரலி ஈரோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்,"இவ்வாறு தெரிவித்தார்.


