Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நிமிஷா மரண தண்டனையை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: ஒன்றிய அரசு

டெல்லி: கேரள செவிலியருக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. கேரள செவிலியருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதை தடுத்து நிறுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஏமனில் செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு ஜூலை 16ல் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசின் சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் தகவல் தெரிவித்தார். மரண தண்டனையை நிறுத்த எடுத்த நடவடிக்கைகளை வெளிப்படையாக தெரிவிப்பதில் சிக்கல் உள்ளது என ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.