நெல்லை: நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட கவினின் உடலை பெற்றோர் பெற்றுக் கொண்டனர். ஆணவக் கொலை செய்த சுர்ஜித் சரணடைந்த நிலையில் அவரது தந்தை எஸ்.ஐ. சரவணன் நேற்று கைது செய்யப்பட்டார். சுர்ஜித்தின் பெற்றோரை கைது செய்ய வலியுறுத்தி கவினின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினர். கவினின் உடலுக்கு அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
+
Advertisement