மதுரை விசாகா பெண்கள் விடுதியில் தீவிபத்து ஏற்பட்டு 2 பெண்கள் உயிரிழந்த விவகாரத்தில் விடுதி நிர்வாகி கைது
மதுரை: மதுரை விசாகா பெண்கள் விடுதியில் தீவிபத்து ஏற்பட்டு 2 பெண்கள் உயிரிழந்த விவகாரத்தில் விடுதியை நடத்தி வந்த இன்பா என்ற பெண்ணை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஃபிரிட்ஜ் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் விடுதியில் தங்கியிருந்த பரிமளா, சரண்யா ஆகியோர் உயிரிழந்தனர்.


