காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் உத்திரமேரூர் அருகே தார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தார் உருக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென்று தீவிபத்து ஏற்பட்டுள்ளது. நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தார் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. புகை மண்டலம் காரணமாக சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் மூச்சுத்திணறல், கண் எரிச்சலால் அவதி அடைந்துள்ளனர்.
+
Advertisement