வரும் ஆண்டுகளில் இந்தியாவின் ஆன்லைன் ஷாப்பிங் வளர்ச்சி பெறும்: மிக்கென்சி நிறுவன ஆய்வறிக்கையில் தகவல்
டெல்லி: வரும் ஆண்டுகளில் இந்தியாவின் ஆன்லைன் ஷாப்பிங் வளர்ச்சி பெறும் என மிக்கென்சி நிறுவன ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது. நாட்டில் இணையதளத்தை பயன்படுத்தும் 850 மில்லியன் பேரில் 20 முதல் 25% பேரே ஆன்லைனில் பொருள் வாங்குகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, சீனாவை ஒப்பிடும்போது இந்தியாவில் ஆன்லைனில் ஷாப்பிங் செய்பவர்கள் சதவீதம் குறைவு. அமெரிக்கா, சீனாவில் இணையதள சேவையை பயன்படுத்துவோரில் 85% பேர் ஆன்லைனில் பொருட்கள் வாங்குகின்றனர்.