டெல்லி : டெல்லியில் நடைபயிற்சி மேற்கொண்ட தமிழ்நாடு எம்.பி.,க்கு அநீதி நடந்துள்ளது; காங். எம்.பி., சுதாவின் செயின் பறிப்பு விவகாரம் தொடர்பாக துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் ஒம் பிர்லாவை சந்தித்து, திமுக எம்.பி., டி.ஆர்.பாலு வலியுறுத்தி உள்ளார். எம்.பி., சுதாவின் செயின் பறிப்பு சம்பவம் தொடர்பாக அவையில் விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து, திமுக எம்.பி., டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.