இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை: இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து சிறைப்பிடிக்கப்படுவது வேதனை அளிக்கிறது. மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க தூதரக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.