Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஆந்திராவில் ஜெகன் மோகன் மீண்டும் வெற்றிபெறுவார் என்று ரூ.30 கோடி பந்தயம் கட்டிய ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகி மர்மமரணம்

அமராவதி: ஆந்திராவில் ஜெகன் மோகன் மீண்டும் வெற்றிபெறுவார் என்று ரூ.30 கோடி பந்தயம் கட்டிய ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகி மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். விஜயவாடா அருகே ஏலூர் மாவட்டம் தூர்பு திகவல்லி கிராமத்தை சேர்ந்த ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகி வேணுகோபால் உயிரிழந்தார். படுதோல்வியால் பந்தயம் கட்டியவர்கள் வேணுகோபால் வீட்டில் இருந்த பொருட்களை எடுத்துச் சென்றனர். வீட்டில் உள்ள பொருட்களை எடுத்துச் சென்ற நிலையில் மாந்தோப்பில் தலையில் காயங்களுடன் சந்தேகத்திற்கிடமான நிலையில் வேணுகோபால் இறந்துகிடந்தார்.