சென்னை : படத் தயாரிப்பு நிறுவனத்திடம் ரூ.9 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் ரவி மோகன் தொடர்ந்த வழக்கில் தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 80 நாட்கள் கால்ஷீட் கொடுத்தும் படப்பிடிப்பை தொடங்கவில்லை என ரவி மனுவில் தெரிவித்தார். சம்பளம் ரூ.6 கோடியை திரும்பத் தரக் கோரி பாபி டச் கோல்டு யுனிவர்சல் தாக்கல் செய்த வழக்குடன் இந்த வழக்கும் ஒத்திவைக்கப்பட்டது.
Advertisement