Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நில அளவர்-உதவி வரைவாளர் பதவிக்கு ஆக.19ம் தேதி மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு

சென்னை: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிக்கை: நில அளவைப் பதிவேடுகள் சார்நிலைப்பணியில் அடங்கிய நில அளவர், வரைவாளர் மற்றும் தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணியில் அடங்கிய நில அளவர்- உதவி வரைவாளர் ஆகிய பதவிகளுக்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் கடந்த 2022 ஜூலை 29ம் நாளிட்ட அறிவிக்கை மூலம் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான 4ம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், எண் 3, தேர்வாணையச் சாலை, சென்னை 600 003-ல் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப் பட்டுள்ளது. மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான நாள், நேரம் மற்றும் இது விவரங்கள் அழைப்பாணையை தேர்வர்கள் தேர்வாணைய இணையதளமான (www.tnpsc.gov.in) லிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் தேர்வர்களுக்கு அதற்கான விவரம் எஸ்எம்எஸ்,இ-மெயில் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும். அழைப்பாணை தனியே அஞ்சல் மூலம் அனுப்பப்பட மாட்டாது. சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் அனைவரும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டு தெரிவு செய்யப்படுவார்கள் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது. தேர்வர்கள் மேற்படி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு குறிப்பிடப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் கலந்துகொள்ள தவறினால் மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.