IT ஊழியரை கடத்தி தாக்கிய வழக்கில், நடிகை லட்சுமி மேனனுக்கு முன் ஜாமின் வழங்கி கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு
திருவனந்தபுரம் : IT ஊழியரை கடத்தி தாக்கிய வழக்கில், நடிகை லட்சுமி மேனனுக்கு முன் ஜாமின் வழங்கி கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு சமரசம் செய்துவிட்டதால், லட்சுமி மேனனுக்கு முன் ஜாமின் வழங்குவதில் ஆட்சேபனை இல்லை என எதிர் மனுதாரர் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. செப்டம்பர் 17 வரை அவரை கைது செய்ய தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.