Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணை மயக்க ஊசி செலுத்தி பலாத்காரம்: லேப் டெக்னீசியன் போக்சோவில் கைது

திருமலை: தனியார் மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த இளம்பெண்ணை மயக்க ஊசி செலுத்தி பாலியல் பலாத்காரம் செய்த லேப் டெக்னீசியனை போக்சோவில் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம் ஜகத்தியால் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவர் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரை அவரது பெற்றோர் கடந்த 6ம்தேதி கரீம்நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இளம்பெண் அனுமதிக்கப்பட்டுள்ள அறைக்கு நேற்று அம்மருத்துவமனையில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவர் வந்தார். அவர் பெண்ணுக்கு ஊசி போட வேண்டும். அனைவரும் வெளியே காத்திருங்கள் எனக்கூறியுள்ளார். அதன்படி பெண்ணின் பெற்றோர் அறைக்கு வெளியே சென்று காத்திருந்தனர்.

அப்போது அந்த நபர், அறையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை துணியால் மறைத்துள்ளார். அதன்பிறகு இளம்பெண்ணுக்கு மயக்க ஊசி போட்டுள்ளார். மயங்கிய அப்பெண்ணை அந்த நபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அறையில் இருந்து அவர் வெளியே சென்றவுடன் இளம்பெண்ணின் பெற்றோர் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது தங்களது மகள் மயங்கிய நிலையில் அலங்கோலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்களிடம் தற்போது வந்து சென்றவர் யார் என்று கேட்டு வாக்குவாதம் செய்தனர்.

இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர் அம்மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணிபுரியும் மகாராஷ்டிராவை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (23) என்பதும், அவர் மதுபோதையில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து தட்சிணாமூர்த்தியை கைது செய்தனர். மேலும் அவர் வைத்திருந்த செல்போனை சோதனை செய்தபோது அதில் ஆபாச படங்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து செல்போனை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.