Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குமரியில் படகு பயணம் ஆன்லைனில் டிக்கெட்: மென்பொருள் தயாராகிறது

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம் மற்றும் கண்ணாடி இழை பாலத்தை பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் இதற்காக படகு போக்குவரத்தினை நடத்தி வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கில் சுற்றுலா பயணிகள் வந்து குவிவதால் படகு பயணத்திற்கு டிக்கெட் எடுக்க நீண்ட வரிசை காணப்படுகிறது. சில சமயங்களில் 2 முதல் 5 மணி நேரம் வரை வரிசையில் காத்து நிற்க வேண்டியுள்ளது. இதனால் முதியோர் குழந்தைகள் மாணவ மாணவியர்கள் பெரிதும் அவதியுற்று வருகின்றனர்.

போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படுகிறது. இது குறித்து நேற்று கன்னியாகுமரி வந்த மாவட்ட கலெக்டர் அழகு மீனா கூறுகையில், படகுதுறையில் கூட்ட நெரிசல் பிரச்னையை தீர்ப்பதற்காக ஆன்லைன் மூலம் டிக்கெட் விநியோகிக்க தமிழ்நாடு தொழில்நுட்பத் துறையின் மூலம் மென்பொருள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி நிறைவு பெற்றதும் நேரம் குறிப்பிட்டு டிக்கெட் வழங்கப்படும். குறிப்பிட்ட நேரத்தில் பயணிகள் வந்து படகு பயணம் மேற்கொள்ளலாம். மிக குறைந்த காலத்தில் அமல்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்றார்.