Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குலசேகரபட்டினம் கடற்கரையில் மின் கம்பங்கள் சாய்ந்ததால் அச்சம்: கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே குலசேகரபட்டினம் கடற்கரையில் ஏற்பட்ட தொடர் கடல் அரிப்பால் கடற்கரையோர பூங்காவின் சுற்றுச்சுவர் உயர் மின் விளக்கு கம்பங்கள் சாய்ந்திருக்கின்றன. திருச்செந்தூர் அருகே கடற்கரை ஓரமாக அமைந்துள்ளது குலசேகரபட்டினம். இந்த குலசேகரபட்டினம் அமைந்துள்ள முத்தாரமன் கோயில் மிகவும் பிரசித்திபெற்றது. இந்த கோயிலில் தசரா திருவிழா விமர்சியாக நடைபெறும். தசரா திருவிழா சிகர நிகழ்ச்சி சூரசம்காரம் கடற்கரை ஓரமாக நடைபெறும். அன்றைய தினம் கடற்கரை பகுதியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். இவ்விழா சிறப்பு வாய்ந்த குலசேகரபட்டினம் கடற்கரை மெதுவாக அலைமோதி வருகிறது.

கடந்த 8மாதங்களுக்கு முன்பு சூரசம்காரம் நடைபெறும். பகுதியிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள நூற்றுக்கு மேற்பட்ட பனைமரங்கள் கடல் அரிப்பால் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டது. எனவே உடனடியாக கடல் அரிப்பு தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக அலுவலர்கள் தெடர்ந்து கோரிக்கை விடுத்துவருகின்றனர். ஆனால் அதனை யாரும் கண்டுகொள்ளவில்லை. அதை தொடர்ந்து கடற்கரையில் உள்ள பூங்கா சுற்றுச்சுவர் தொடர் கடற்கரை அரிப்பால் கடலுக்குள் விழுந்தது. இந்த சம்பவம் குலசேகரபட்டினத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

அதன் அருகில் நின்ற ஐந்துக்கும் மேற்பட்ட உயர் மின் கம்பங்கள் கடலுக்குள் விழுந்து. இதனால் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் இந்த கடற்கரையில் அமைந்துள்ள பூங்காவுக்கு வர அச்சப்பட நிலை, ஏற்படுகிறது. இந்த சாலை தசரா காலங்களில் பக்தர்கள் கடற்கரையில் வந்து செல்வதற்கு முக்கிய சாலை உள்ளது. ஏற்கனவே திருச்செந்தூரில் கடந்த சில மாதங்கள் முன்பு கடல் அரிப்பு ஏற்பட்டது. அந்த கடல் அரிப்பு நின்றதை, குலசேகரபட்டினத்தில் கடல் அரிப்பு தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இதனால் கடல் முழுவதும் கலையிழந்து காணப்படுகிறது. எனவே கடல் அரிப்பு தடுப்பதை உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.