கிருஷ்ணகிரியில் வரும் 24ம் தேதி திமுக வர்த்தகர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கூட்டம்: மாநில செயலாளர் காசிமுத்து மாணிக்கம் அறிவிப்பு
சென்னை: திமுக வர்த்தகர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர், தலைவர்கள் கூட்டம் கிருஷ்ணகிரியில் வரும் 24ம் தேதி நடைபெறும் என்று மாநில செயலாளர் காசிமுத்து மாணிக்கம் அறிவித்துள்ளார். திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசி முத்துமாணிக்கம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திமுக வர்த்தகர் அணி மாவட்ட, மாநில அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் தலைவர்கள் கூட்டம் வரும் 24ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணி அளவில் கிருஷ்ணகிரி, தேவராஜ் மகாலில் எனது தலைமையில் நடைபெற உள்ளது.
இதில், திமுக துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா எம்பி சிறப்புரையாற்றுகிறார். வர்த்தகர் அணி துணைத் தலைவர்கள் கோவி.செழியன், பழஞ்சூர் கே.செல்வம், எஸ்.மோகன், வர்த்தகர் அணி இணைச் செயலாளர்கள் மாலைராஜா, வி.ஜெயன், கோவை நா.முருகவேல், பி.டி. பாண்டிச்செல்வம், எஸ்.முத்துச்செல்வி, என்.தாமரைபாரதி, எஸ்.ஆர்.எஸ். உமரிசங்கர், வர்த்தகர் அணித் துணைச் செயலாளர்கள் ஐ.கென்னடி, டி.ஆர். முத்துச்சாமி, எம்.எஸ். அசோக் பாண்டியன், மீஞ்சூர் கே.ஜி.பாஸ்கர் சுந்தரம், சிவகாசி த.வனராஜ், வி.பி. மணி, இ.ராமர், க.தனசெல்வம்,
பெ. சுந்தரவரதன், வே. பல்லவிராஜா, வி.எஸ்.ராமகிருஷ்ணன், பி.தர்மசெல்வன், ஆ.சத்தியமூர்த்தி, குன்னம் ராஜேந்திரன், கிருஷ்ணகிரி கே.வி.எஸ்.சீனிவாசன், கிருஷ்ணகிரி பி.டி.அன்பரசன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இக்கூட்டத்தில் மாவட்ட மற்றும் மாநில அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், தலைவர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த கூட்டத்தில் ஒன்றிய, பகுதி, நகர, பேரூர் வர்த்தகர் அணி பட்டியல் பெறுதல் மற்றும் திமுக அணி வளர்ச்சி குறித்து விவாதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.