Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கொளத்தூர் மாற்றுத்திறனாளி கொலை வழக்கு 12 பேர் விடுதலை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல் முறையீடு: சிபிஐ பதில் தர உத்தரவு

சென்னை: கொளத்தூரை சேர்ந்த மாற்றுத்திறனாளியான நில புரோக்கர் புவனேஸ்வரன் என்பவர் கடந்த 2012 ஜனவரி 10ம் தேதி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலை சம்பவம் தொடர்பாக விசாரணையை நடத்தி வழக்கு பதிவு செய்த சி.பி.ஐ 12 பேருக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். விசாரணை காலத்தில் ஒருவரும் மரணமடைந்தார். இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பளித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், முன்னாள் எம்எல்ஏ ரங்கநாதன் உள்ளிட்ட 11 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து கொலையான புவனேஸ்வரனின் சகோதரர் மகேஸ்வரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு நேற்று நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனு குறித்து சி.பி.ஐ. மற்றும் ப.ங்கநாதன் உள்ளிட்டோர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 26ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.