Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கொடநாடு காட்சி முனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கோத்தகிரி : கோத்தகிரி அருகே அமைந்துள்ள கொடநாடு காட்சி முனைக்கு நேற்று தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். தற்போது கோடைக்காலம் என்பதாலும் அவ்வப்போது பெய்து வரும் சாரல் மழையின் காரணமாக நிலவும் குளிர்ந்த காலநிலை மற்றும் கொடநாடு காட்சி முனையில் நிலவிய இதமான காலநிலையில் இங்கு அமைந்துள்ள தமிழக -கர்நாடகா ஆகிய இரு மாநில எல்லைப் பகுதிகளில் உள்ள மலை முகடுகளின் நடுவே உருவாகும் அடர்ந்த வென்மேகங்களையும், ஆழமான பள்ளத்தாக்குகள்,

ராக் பில்லர், பச்சை பசேல் என காட்சியளிக்கும் அடர்ந்த வனப் பகுதிகளையும், அதன் நடுவில் வசிக்கும் பழங்குடியினரின் கிராமங்களான தெங்குமரடா, கல்லம்பாளையம் உள்ளிட்ட குக்கிராமங்களையும், பவானிசாகர் அணை மட்டுமல்லாமல் கர்நாடக மாநிலத்தின் குண்டல்பேட், அங்களா உள்ளிட்ட பகுதிகளையும் கண்டு ரசித்தனர்.மேலும் இங்கு உள்ள ரம்மியமான காட்சிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தது மட்டுமல்லாமல் போட்டோ எடுத்து மகிழ்ந்து சென்றனர்.