Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நெல்லையில் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சிபிசிஐடி

நெல்லை: நெல்லையில் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. வழக்கில் 32 ஆவணங்கள் மற்றும் 83 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி தாக்கல் செய்தது. நெல்லை கே.டி.சி. நகரில் கடந்த ஜூலை 27ம் தேதி மென்பொறியாளர் கவின் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். வழக்கில் இளைஞர் சுர்ஜித், அவரது தந்தையான எஸ்.ஐ. சரவணன், உறவினர் ஜெயபாலன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை கவின் கொலை வழக்கில் ஜாமின் கோரி எஸ்.எஸ்.ஐ. சரவணன் 3வது முறையாக தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 3வது முறையாக ஜாமீன் கோரி நெல்லை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சரவணன் மனுதாக்கல் செய்தார். ஏற்கனவே 2 முறை எஸ்எஸ்ஐ சரவணன் தாக்கல் செய்த ஜாமின் மனு தள்ளுபடியான நிலையில் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது.