கச்சத்தீவு: கச்சத்தீவுக்கு திடீர் பயணம் மேற்கொண்ட இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக கச்சத்தீவை இந்தியாவுக்கு மீண்டும் வழங்கும் பேச்சிற்கே இடமில்லை என்று அங்கு இருக்கும் மீனவர்களிடம் உறுதி அளித்துள்ளார். வங்க கடலில் மீன்பிடிக்கும் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதால், மீனவர்களை பாதுகாப்பதற்காக கச்சத்தீவை மீட்க வேண்டும் என தமிழக அரசியல் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் தமிழக மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடித்தாலும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை சிறை பிடிக்கும் இலங்கை கடற்படை, அவர்கள் படகுகளையும் பறிமுதல் செய்து வருகிறது.
இதனால் கோடிக்கணக்கில் தமிழக மீனவர்கள் இழப்பை சந்தித்துள்ளனர். மீனவர்கள் கைது நடவடிக்கையை தொடரும் நிலையில், இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகாண வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் ஆண்மையில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினர். தமிழக அரசின் தலையிட்டதை அடுத்து, அவர் போராட்டத்தை வாபஸ் பெற்ற நிலையில், இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கச்சத்தீவை விவகாரத்தை தமிழக தலைவர்கள் அரசியல் ஆக்குவதாக குற்றம் சாட்டினார். இதற்கு தமிழக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்க இரண்டு நாள் பயணமாக நேற்று யாழ்ப்பாணத்திற்கு சென்றார்.
அங்குள்ள மயிலிட்டித் துறைமுகத்தில் வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்த அவர் யாழ்ப்பாணதில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கும் அடிக்கல் நாட்டினார். பின்னர் திடீர் என மாலை 5 மணிக்கு யாழ்ப்பாண ஊர் காவல் துறையில் இருந்து நான்கு ரோந்து படகுகளுடன் கச்சத்தீவுக்கு சென்ற திசாநாயக்க அங்குள்ள மீனவ மக்களுடன் கலந்துரையாடினார். இலங்கை அதிபர் கச்சத்தீவு விவகாரத்தில் எந்த நிர்பந்தத்திற்கும் இலங்கை அடிபணியாது என கூறினார்.
கச்சத்தீவை இந்தியவிடம் திரும்ப ஒப்படைக்கும் பேச்சிற்கே இடமில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்த அவர், தமிழக மீனவர்கள் விவகாரத்தில் இலங்கை அரசு மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ளாது என்றும் கூறினார். கைது செய்யப்படும் தமிழக மீனவர்களை எளிதில் விடுவிக்க மாட்டோம் என்று கூறிய திசநாயக்க படகுகளும் ஒப்படைக்கப்பட மாட்டாது என்றும் உறுதியளித்தார். இலங்கை அதிபர் ஒருவர் கச்சத்தீவுக்கு சென்றிருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.