டெல்லி: கரூர் துயரம் தொடர்பான வழக்கில் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. மேலும், விரிவான பதில்மனு தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. விஜய் 7 மணிநேரம் தாமதமாக வந்ததால் காலையில் இருந்து கூடியிருந்த தொண்டர்கள் மயங்கி விழுந்தனர். விஜய் வரும்போது நீர்சத்து குறைபாடு காரணமாக தொண்டர்கள் மயங்கி விழுந்தனர். பலியானோர் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் கூடுதலாக காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
+
Advertisement