Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிப்பு!!

சென்னை : கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. இந்த கூட்டத்தொடர் வருகிற வெள்ளிக்கிழமை வரை நடைபெறும். சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் கூடியதும், மறைந்த 8 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக கரூரில் நடந்த துயர சம்பவம், மறைந்த முன்னாள் கேரள முதல்வர் அச்சுதானந்தன், முன்னாள் ஜார்கண்ட் சட்டமன்ற உறுப்பினர் சிபுசோரன், நாகலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த பொதுச்செயலாளர் சுதாகர்ரெட்டி, மேலும் ஐஏஎஸ் அதிகாரி மருத்துவர் பியூலா வெங்கடேசன் ஆகியோருக்கு சட்டமன்றத்தில் இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து வால்பாறை சட்டமன்ற பேரவை உறுப்பினர் டி.கே.அமுல் கந்தசாமி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பேரவை நிகழ்ச்சியில் ஒத்திவைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 15ம் தேதி (நாளை) 20252026ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கை பேரவைக்கு அளிக்கப்படும். தொடர்ந்து மறுநாள் விவாதம் நடைபெறும். 17ம் தேதி (வெள்ளி) மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதிலுரை மற்றும் வாகெடுப்பு நடைபெறும். 15, 16, 17ம் தேதி ஆகிய மூன்று நாட்களும், கூட்டம் தொடங்கியதும் கேள்வி-நேரம் இடம்பெறும்.