Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வைரம், மரகதம், மாணிக்கம் பதித்தது; டெல்லி செங்கோட்டையில் ரத்தினக்கலசம் கொள்ளை: துறவி வேடத்தில் வந்தவர் கைவரிசை

புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை வளாகத்தில் உள்ள பூங்காவில் ‘தஸ்லக்‌ஷண் மகாபர்வ’ என்ற 10 நாள் ஜெயின் மத நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அப்போது ஜெயின் துறவி வேடத்தில் வந்த சந்தேக நபர், விலை உயர்ந்த பொருட்கள் இருந்ததாகக் கருதப்படும் பையுடன் தப்பிச் செல்லும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன. தொழிலதிபர் சுதிர் ஜெயினுக்குச் சொந்தமான இந்த பொருட்களை, ஜெயின் துறவி வேடத்தில் வந்த மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார்.

திருடப்பட்ட பொருட்களில் சுமார் 760 கிராம் எடையுள்ள தங்க ஜாரி, தங்கத் தேங்காய் மற்றும் வைரங்கள், மரகதங்கள், மாணிக்கங்கள் பதிக்கப்பட்ட 760 கிராம் எடையுள்ள சிறிய தங்க ஜாரி ஆகியவையும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதிர் ஜெயின் தினமும் இந்த பொருட்களை பூஜைகளுக்காக கொண்டு வருவது வழக்கம். சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் எனவும் காவல்துறை உறுதியளித்துள்ளது. ஜெயின் மத நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 9ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும்.