ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய கிறிஸ்தவர்கள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டை சார்ந்த அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய 600 கிறிஸ்தவர்கள் பயனடையும் வகையில் ஜெருலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய 550 கிறிஸ்தவர்களுக்கு நபர் ஒருவருக்கு ரூ.37,000 வீதமும், 50 கன்னியாஸ்திரிகள், அருட்சகோதரிகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ.60,000 வீதமும் ECS முறையில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 1.11.2025-க்கு பிறகு ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவ மத பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதற்கான விண்ணப்ப படிவத்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் / சிறுபான்மையினர் நல அலுவலகங்களில் இருந்து கட்டணமின்றி பெறலாம். www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கலாம். உரிய ஆவணங்களுடன் ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம். சேப்பாக்கம், சென்னை-600 005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை 28.02.2026 அனுப்ப வேண்டும் என சிறுபான்மையினர் நலத்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.


