Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எங்களை சிறையில் அடைத்தாலும் இந்திராகாந்தி ஒருபோதும் துஷ்பிரயோகம் செய்யவில்லை: லாலுபிரசாத் யாதவ் பேச்சு

பாட்னா: இந்திரா காந்தி பல தலைவர்களை சிறைக்குள் தள்ளினார். ஆனால் ஒருபோதும் அவர் அவர்களை துஷ்பிரயோகம் செய்யவில்லை என்று லாலு பிரசாத் கூறினார். ராஷ்ட்ரீய ஜனதாதளம் தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலுபிரசாத்யாதவ் கூறியதாவது: அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் அமல்படுத்தப்பட்ட அவசரநிலைக்கு எதிரான இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல ஜெயபிரகாஷ் நாராயண் அமைத்த வழிநடத்தல் குழுவின் ஒருங்கிணைப்பாளராக நான் இருந்தேன். நான் 15 ஆண்டுகளுக்கும் மேலாக மிசா சட்டத்தின் கீழ் சிறையில் இருந்தேன். பல மாதங்களாக எனக்கும் எனது சகாக்களுக்கும் எமர்ஜென்சி பற்றிப் பேசுவது தெரியாது.

இந்திரா காந்தி எங்களில் பலரை சிறையில் அடைத்தார், ஆனால் அவர் எங்களை ஒருபோதும் துஷ்பிரயோகம் செய்யவில்லை. இந்திராவோ அல்லது அவரது அமைச்சர்களோ எங்களை தேச விரோதிகள் அல்லது தேசபக்தியற்றவர்கள் என்று அழைக்கவில்லை. நமது அரசியலமைப்பின் சிற்பியான அம்பேத்கரின் நினைவைக் கெடுக்கும் வன்முறையாளர்களை அவர்ஒருபோதும் அனுமதிக்கவில்லை. 1975ம் ஆண்டு நமது ஜனநாயகத்தின் மீது ஒரு கறை, ஆனால் 2024ல் எதிர்க்கட்சிகளை கொஞ்சம் கூட மதிக்காதவர் யார் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.