இந்திய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 248 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஃபாலோ ஆன் ஆனது வெஸ்ட் இண்டீஸ் அணி !
டெல்லி: இந்திய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 248 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபாலோ ஆன் ஆனது. இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்நிலையில் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 518 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி நேற்றைய 2ம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்திருந்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷாய் ஹோப் 31 ரன்களும், டெவின் இம்லாக் 14 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். இந்தியா சார்பில் ஜடேஜா 3 விக்கெட் , குல்தீப் யாதவ் ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தனர்.
இந்நிலையில்,இன்று 3ம் நாள் ஆட்டம் நடந்து வருகிறது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சில் 81.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 248 ரன்களுக்கு ஃபாலோ ஆன் ஆனது.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக அலிக் அத்தானஸ் 41 ரன் எடுத்தார். இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன் மூலம் இந்தியா தற்போது வரை 270 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க வெஸ்ட் இண்டீஸ் அணி போராடி வருகிறது. தற்போது ஒரு விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.