Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்திய அணியின் கேப்டனாக கில் நீண்டகாலம் இருப்பார்: ரவி சாஸ்திரி கணிப்பு

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் பயிற்சியாளருமான ரவிசாஸ்திரி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டி: “சந்தேகமே வேண்டாம், சுப்மன் கில் இங்கிருந்து நீண்ட காலம் இந்திய அணியை சுற்றியிருக்கப் போகிறார். ஏனெனில் இங்கிலாந்தில் அவர் எம்மாதிரியான தொடரைக் கொண்டிருந்தார் என்பதை நாம் பார்த்தோம். தற்போது 25 வயது மட்டுமே நிரம்பியுள்ள அவர் இந்த வெளிப்பாடுகளால் இன்னும் சிறப்பாக முன்னேறுவார். தற்போது இந்திய அணியில் இருக்கும் அவர் நீண்ட காலம் இருப்பார். மிகவும் அமைதியாக இருக்கும் அவருடைய பேட்டிங் ராஜரீதியாக இருக்கிறது. கண்களில் பார்ப்பதற்கு சரளமாக நன்றாக பேட்டிங் செய்யும் அவரிடம் நீண்ட நேரம் பெரிய இன்னிங்ஸ் விளையாடும் திறமையும் இருக்கிறது, என்றார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா அளித்துள்ள பேட்டியில்“ ஒருநாள் போட்டிகளில் ரோகித் மற்றும் விராட்டின் அனுபவம் மிகவும் முக்கியமானது. சீனியர்கள் ஜூனியர்களுடன் தொடர்ந்து ஈடுபடுவது மிகவும் முக்கியம். சுப்மன் கில் மிகவும் சிறப்பாக செயல்பட்டார், ஆனால் அவருக்கு விராட் மற்றும் ரோகித் போன்ற வீரர்கள் தேவை.அவர்கள் சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ளனர், அவர்கள் உலகக் கோப்பைகளை வென்றுள்ளனர். விராட் கடந்த ஐபிஎல்லையும் வென்றார். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் காட்டிய புத்திசாலித்தனமான தலைமைக்கு, அவர்கள் டிரஸ்ஸிங் ரூமின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும், என்றார்.