Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கலெக்டர் அலுவலகத்தில் பொறுப்பேற்பு பொதுமக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண கடுமையாக உழைப்பேன்

*கலெக்டர் வெங்கடேஷ்வர் உறுதி

திருப்பதி : பொதுமக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண கடுமையாக உழைப்பேன் என புதிதாக பொறுப்பேற்ற கலெக்டர் வெங்கடேஷ்வர் கூறினார். திருப்பதி மாவட்டத்தின் புதிய கலெக்டராக வெங்கடேஷ்வர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின்னர் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: திருப்பதி மாவட்டத்தில் கடந்த காலங்களில் பணியாற்றிய கலெக்டர்கள் பல பிரச்னைகளை தீர்த்து வைத்துள்ளனர். திருப்பதி மாவட்டத்தின் நலன் மற்றும் வளர்ச்சிக்கு சமமான முன்னுரிமை அளித்து, அனைவரின் ஒத்துழைப்போடு ஒருங்கிணைந்த முறையில் முன்னேற்றம் அடைய நடவடிக்கை எடுப்பேன். அரசின் நலத்திட்டங்களை மக்கள் திருப்திகரமான அளவில் பெறுவதற்கு பயனுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

திருமலை ஏழுமலையான் இருக்கும் திருப்பதி மாவட்டத்தில் பணிபுரிவதை பாக்கியமாக கருதுகிறேன். அரசின் முன்னுரிமை பிரச்னைகளை அவ்வப்போது ஆய்வு செய்து செயல்படுத்தி, அதிக வாய்ப்புள்ள மாவட்டமாக தொழில் வளர்ச்சிக்கு தன்னால் இயன்றதைச் செய்வேன். தொழில் வளர்ச்சி மற்றும் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால், அவற்றைத் தீர்க்க நடவடிக்கை விரைந்து எடுக்கப்படும். மாவட்டத்தில் 98 சதவீதத்துக்கும் அதிகமான என்டிஆர் பரோசா ஓய்வூதியம் பயனாளிகளுக்குத் திட்டமிட்டபடி செயலக ஊழியர்கள் மூலம் விநியோகிக்கப்பட்டுள்ளது.

காரீப் பருவத்தையொட்டி மாவட்டத்தில் விவசாயப் பணிகள் தொடங்கியுள்ளது.

மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்படும். பொதுமக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண கடுமையாக உழைப்பேன். மாவட்ட, வருவாய் கோட்ட, மண்டல அளவிலான அலுவலர்கள், மக்கள் பிரச்னைகளை தீர்க்கவும், பொது பிரச்னை தீர்க்கும் மக்கள் குறை தீர்வு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.இந்நிகழ்ச்சியில், இணை ஆட்சியர் தியானசந்திரா, திருப்பதி மாநகராட்சி ஆணையர் அதிதி சிங், டிஆர்ஓ பென்சல கிஷோர், மாவட்ட அலுவலர்கள், ஆட்சியர் அலுவலகப் பணியாளர்கள், ஆர்டிஓக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.