Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வாரிசு அரசியல் என்று வசைபாடுவது ஏன்? 1989க்கு பின்னர் பிரதமராக யாராவது இருந்தார்களா? காந்தி குடும்பம் மீதான மோடி தாக்குதலுக்கு கார்கே பதிலடி

ஜெய்ப்பூர்: காந்தி குடும்பம் வாரிசு அரசியல் என்று பேசும் மோடி, 1989க்கு பிறகு அந்த குடும்பத்தில் இருந்து யாராவது பிரதமராகவோ அல்லது அமைச்சராகவோ இருந்தார்களா என்று கார்கே கேள்வி எழுப்பி உள்ளார். ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கலந்து கொண்டு பேசியதாவது: மோடி பொய்யர்களின் தலைவர். அவர் நாட்டைப்பற்றி சிந்திக்கவில்லை, காந்தி குடும்பத்தை மட்டுமே துஷ்பிரயோகம் செய்கிறார். எனக்கு 56 அங்குல மார்பு இருக்கிறது, நான் பயப்பட மாட்டேன் என்று மோடி கூறுகிறார். உங்களுக்கு பயமில்லை என்றால், ஏன் எங்கள் நிலத்தின் பெரும் பகுதியை சீனாவுக்கு தாரைவார்த்து விட்டுவிட்டீர்கள்.

அவர்கள் உள்ளே வருகிறார்கள், நீங்கள் தூங்குகிறீர்கள். நீங்கள் அப்போது தூக்க மாத்திரை போட்டு தூங்கி விட்டீர்களா?. மோடி எப்போதும் பொய்களை சொல்லி, மக்களை சித்திரவதை செய்து தன்னுடன் அழைத்துச் செல்ல விரும்புகிறார். 1989ல் இருந்து காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் பிரதமராகவோ, அமைச்சராகவோ ஆகவில்லை. ஆனாலும் மோடி வாரிசு அரசியல் என்று வசைபாடுகிறார். பல்வேறு வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார். தேர்தலின் போது நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார், ஆனால் கலவரங்களைக் கண்ட மணிப்பூருக்கு அவர் செல்லவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.