Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஐதராபாத்தில் இருந்து ஹரியானாவிற்கு தப்பி ஓட்டம் சிகிச்சைக்கு வரும் இளைஞர்களிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட டாக்டர்: வீடியோ ஆதாரங்களுடன் மனைவி போலீசில் புகார்

திருமலை: ஐதராபாத்தில் இருந்து ஹரியானாவிற்கு தப்பியோடி சிகிச்சைக்கு வரும் இளைஞர்களிடம் டாக்டர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதாக அவரது மனைவி வீடியோ ஆதாரங்களுடன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத் மவுலாலியைச் சேர்ந்தவர் டாக்டர் ஜவ்வாத் அலி காஜா. இவர் கடந்த 2014ம் ஆண்டு ஐதராபாத்தை சேர்ந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு அவர்களுக்கு 2 குழந்தைகள் பிறந்தன. திருமணத்தின்போது, ​​இளம்பெண்ணின் பெற்றோர் ஜவ்வாத் அலி காஜாவிற்கு வரதட்சணையாக ரூ.25 லட்சம் மற்றும் 40 சவரன் நகைகள் வழங்கினர். ஆனால் திருமணமாகி சில வருடங்கள் ஆன நிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை துன்புறுத்தத் தொடங்கி உள்ளார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஜவ்வாத் அலி காஜா வீட்டை விட்டு ஓடிவிட்டார். வீட்டின் மேல் தளத்தில் தங்கி இருந்த அவரது நண்பர் விஷ்ணுவர்தனிடம் கேட்டுள்ளார். பின்னர் சிறிது நேரத்திலேயே விஷ்ணுவர்தன் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு விஷ்ணுவர்தன் கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில் ஜவ்வாத் அலி காஜா ஒரின சேர்க்கையில் ஈடுபட்டதாக எழுதி இருந்தார். இதுகுறித்து குஷைகுடா காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இருப்பினும் இந்த வழக்கில் இருந்து உரிய ஆதாரங்கள் இல்லாததால், டாக்டர் ஜவ்வாத் அலி காஜா தப்பினார். தற்போது ஹரியானாவில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். அங்கும் மருத்துவம் என்ற பெயரில் தன்னிடம் சிகிச்சைக்கு வரும் இளைஞர்களை குறிவைத்து அவர்களை அடிபணிய வைத்து ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பான சில வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை ஜவ்வாத் அலி காஜாவின் மனைவி சேகரித்துள்ளார். வீடியோ, புகைப்படம் ஆதாரங்களுடன் ஐதராபாத் போலீசில் புகார் அளித்துள்ளார்.