Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்தியா சிந்து நதியில் அணை கட்டினால் ஏவுகணைகளை கொண்டு தகர்ப்போம்: பாக். ராணுவத் தளபதி மிரட்டல்

வாஷிங்டன்: சிந்து நதியில் இந்தியா அணை கட்டட்டும் என்று தான் காத்துக்கொண்டிருக்கிறோம். இந்தியா மட்டும் அணை கட்டினால் அதை 10 ஏவுகணைகளை கொண்டு தகர்ப்போம் என்று பாகிஸ்தான் ராணுவ தளபதி அடாவடியாக பேசியுள்ளார். அது மட்டுமின்றி உலக நாடுகளுக்கும் அணு ஆயுத மிரட்டல் விடுத்துள்ளார்.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா,எடுத்தது. இந்த சம்பவத்துக்கு பின் கடந்த ஜூன் மாதம் பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி அசிம் முனீர் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து பேசினார். அதிபர் டிரம்ப், அசிம் முனீரை வெள்ளை மாளிகைக்கு வரவழைத்து அவருக்கு விருந்து அளித்தார். இந்த நிலையில்,அசிம் முனீர் மீண்டும் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.

அமெரிக்காவுக்கு சென்றுள்ள ஆசிம் முனிர், டாம்பாவில் நடைபெற்ற சென்ட்காம் தளபதி ஜெனரல் மைக்கேல் குரில்லாவின் ஓய்வு விழா மற்றும் புதிய தளபதி அட்மிரல் பிராட் கூப்பரின் பொறுப்பேற்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்

அமெரிக்காவில் பேசிய அசிம் முனீர் கூறியதாவது:

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்யும் இந்தியா முடிவு, 2 கோடி மக்களை பட்டினியில் கிடக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா அணையை கட்டட்டும் என்று தான் காத்துக்கொண்டு இருக்கிறோம். இந்தியா மட்டும் அணையை கட்டினால், 10 ஏவுகணகளை கொண்டு அதை தகர்ப்போம். சிந்து நதி என்பது இந்தியாவின் குடும்ப சொத்து இல்லை. எங்களுக்கு ஏவுகணைகளுக்கு ஒன்றும் பற்றாக்குறை இல்லை பாகிஸ்தான் இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் உலகில் பாதியை அழித்துவிடுவோம் என்று அவர் மிரட்டியுள்ளார்.