சென்னை: சுதந்திர தினம் மற்றும் வார விடுமுறையை ஒட்டி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கபடுகிறது. சுதந்திர தினத்தன்று பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்க, சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிக்கு முன்பதிவு செய்யப்படாத மெமு சிறப்பு ரெயில் சேவையை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, எழும்பூரில் இருந்து திருச்சிக்கு செல்லும் மெமு சிறப்பு ரெயில் (வண்டி எண்- 06161) ஆக்ஸ்ட் 14 (இன்று) இரவு 11.10 மணிக்கு திருச்சிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு திருச்சி சென்றடையும். மறுமார்க்கத்தில், திருச்சியில் இருந்து தாம்பரம் செல்லும் மெமு சிறப்பு ரெயில் (வண்டி எண்- 06162) ஆகஸ்ட் 17 அன்று இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.